இந்திய  நிவாரணப் பொருட்கள் கையளித்தல்.

இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை

கருத்திக்கொண்டு இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரணப் பொருட்களில்

ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் 03.06.2022 திகதி மட்டக்களப்பை வந்தடைந்தன.

கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

குறித்த நிவாரணப்பொருட்களில் ஏறாவூர் நகர பிரதேச மக்களுக்கான பொருட்கள் நேற்று

(2022.06.05) மாலை, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த் மற்றும்

உதவி மாவட்ட செயலாளர்  திரு.ஆறுமுகம் நவேஸ்வரன் ஆகியோரினால்

 ஏறாவூர் நகர் பிரதேச செயலாளரிடம் (MRS. நிஹாரா மவ்ஜுட் ) கையளிக்கப்பட்டன.

 

இன்று (06.06.2022)தொடக்கம் நிவாரணப் பொருட்கள்  குறைந்த வருமானம்

பெறும் குடும்பங்களுக்கு பகிர்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

News & Events

31
ஜூலை2026
நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா

    "நேர்மைக் கலாசாரம் - கிளீன் சிறிலங்கா"...

15
ஜூன்2026
பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

பிரதேச மட்ட விளையாட்டு விழா - 2026

      பிரதேச மட்ட விளையாட்டு விழா...

15
ஜூன்2026
ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்.

      ஏறாவூர் பிரதேச மட்ட கிரிக்கெட்...

« »

குடியுரிமை சாசனம்

Scroll To Top