ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைக் குழாத்திற்கான புதிய மத்தியஸ்தர்கள் நியமனம்
219ம் இலக்க ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைகள் குழாத்திற்காக 33 மத்தியஸ்தர்கள் (26 ஆண்கள், 07 பெண்கள்)
தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை , 5 நாள் பயிற்சி
மற்றும் பரீட்சை என்பவற்றில்பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மத்தியஸ்தர்களுக்கான
நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 18.05.2022ம் திகதி பி.ப 3.00 மணிக்கு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர்
திருமதி. நிஹாறா மௌஜுத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான
திரு. கணபதிபிள்ளை கருணாகரன் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக ஏறாவூர் நகர பிரதேச செயலக உதவித்திட்டமிடல்
பணிப்பாளர் திருமதி. M.A.H. சிஹானா, முன்னாள் மத்தியஸ்த சபை தவிசாளர் M.M. இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீதி அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களான மத்தியஸ்த பயிற்றுனர்
M.I.M ஆஸாத், மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோத்தர்களான திருமதி. சாந்த தர்மினி விமல சந்த்துரு மற்றும் M.A.M அஜுன்
ஆகியோரின் நெறிப்படுத்தலோடு மேற்படி நிகழ்வு நடைபெற்றதுடன்,
ஏறாவூர் நகர மத்தியஸ்த சபைகள் குழாத்தின் புதிய தவிசாளராகவும் முதலாவது பெண் தவிசாளராகவும்
திருமதி பஹியா அப்துல் காதர் நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.




















