Print
Parent Category: Top Menu

 

 

 

சர்வதேச மகளிர் நிகழ்வும் நிஸா நூல் வெளியீட்டு நிகழ்வும் - 2023

 

 

சர்வதேச மகளிர் நிகழ்வும் நிஸா நூல் வெளியீட்டு நிகழ்வும் ஏறாவூர் நகர பிரதேச

செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் 14-03-2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை

மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் ஜனாபா நிஹாரா மௌஜூத் தலைமையில்

இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஜனாப் A.C.A.அப்கர்,

உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.A.H.சிஹானா ,கணக்காளர் திருமதி. T.வினோதன்,

நிர்வாக உத்தியோகத்தர்  S.A.றஹீம் ,மேலதிக மாவட்ட பதிவாளர் A.M.M.Nafees,

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கோவிட் தொற்றுக் காலங்களில் உயிர்காக்கும் பணியினை செம்மையாக

நிறைவேற்றியமைக்காக பிரதேசத்தின் பெருமைக்குரிய பெண் எனும் விருது

ஏறாவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஜனாபா பாத்திமா சாபிறா வஸீம்

அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு மகளிர் தின சிறப்பு மலரான நிஸா கன்னி மலராக

வெளியிடப்பட்டது. இம்மலர் வெளியீட்டு நிகழ்வில் எமது பிரதேசத்தை சேர்ந்த படைப்பாளிகள் மற்றும்

கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வினை ஏறாவூர் நகர பிரதேச செயலக

பெண்கள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான J.காபிலா மற்றும் T. மபாஹிறா

ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் .

நிஸா நூல் 2023

 

 

FaLang translation system by Faboba